ஹேமா(முன்னாள் காதலி) ஆக்சிடன்ட்ல சாகலை, கொலை பண்ணி இருக்காங்க’ – பாரதியிடம் உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற பெயரில் விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அந்த எபிசோடில் ஹேமா(பாரதியின் முன்னாள் காதலி) விபத்தில் இறக்க வில்லை. சதியால் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை தெரியவருகிறது.

கார்த்திகை தீபம்(பாரதி கண்ணம்மா)

கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவும்(கண்ணம்மா) கார்த்திக்கும்(பாரதி) ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். கார்த்தி தன் மகளுக்காக தீபாவுடன் இருக்க சம்மதித்துள்ளார். அப்படி இருக்க தற்போது தமிழிலும் கூடிய சீக்கிரம் கண்ணம்மாவும் பாரதியும் ஒரே வீட்டில் வாழ போகும் எபிசோடும் வரவுள்ளது. அதாவது தெலுங்கு சீரியலில் தீபாவின் உடல் நிலை மோசமாக இருப்பதால் தீபாவுக்கு எதாவது ஒன்று நடந்தால் குழந்தைகளின் நிலை என்னாகுமோ?? என்கிற பயத்தில் கார்த்திக் தீபாவை வீட்டில் தங்க சம்மதிக்கிறார். அதிலும் அந்த சீரியல் வில்லி பல சதிகளை தீட்டிக்கொண்டு தான் உள்ளார்.

தனுஷின் “தி கிரேமேன்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட் – வைரலாகும் புகைப்படம்!!

இப்பொழுது கண்ணம்மா அதாவது தீபா கார்த்திக்கிடம் ஹேமா(பாரதியின் முன்னாள் காதலி) இறந்தது விபத்தால் அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் நீங்கள் போன காரை வேண்டும் என்றே இடித்துள்ளார்கள். அதுவும் காசு கொடு இவ்வாறு செய்ய சொல்லி இருக்கிறார்கள் என்றும் சொல்லி விடுகிறார். அதுவும் உங்களுக்கு மிகவும் வேண்ட பட்டவர்கள் தான் இதனை செய்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட கார்த்திக்(பாரதி) ஷாக்காகி உள்ளார். இதோடு ப்ரோமோவும் முடிவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here