வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியானவர் தான் நடிகை ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருந்தது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என எல்லா பக்கமும் கலக்கி வந்தார்.
இப்படி இருக்க, இப்பொழுது அவருக்கு மெயினாக இருப்பது சீதாராமம், பாக்கியலட்சுமி சீரியல் தான். இரண்டு சீரியலிலும் வில்லியாக கலக்கி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் பழைய இன்டெர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தனது பிள்ளைகளை பற்றி பேசியுள்ளார்.
அதாவது தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், ஆனால் நான் அப்படி காட்டிக்க மாட்டேன், என்ன பார்த்தாலும் அப்படி தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும், தனது மகனுக்கு ஆட்டிசம் இருப்பதாகவும், இதுவரை அது அவனுக்கே தெரியாது எனவும், அந்த அளவிற்கு அவனை வளர்த்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ரேஷ்மா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram