ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், RCB அணியானது, தங்களது நட்சத்திர வீரரான விராட் கோலியின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
விராட் கோலி:
ஐபிஎல் தொடரானது, வரும் 31ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக, ஒவ்வொரு அணியும், தங்களது புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தி வருகின்றன. இதன்படி, பெங்களூரின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது, அவர்களானது முன்னாள் நட்சத்திர வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லுடன் இணைந்து விராட் கோலி தங்களது சொந்த மைந்தனமான எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் அணியை புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தினர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில், RCBயின் அனைத்து வீரர்களும் அணி வகுத்து போட்டோ ஒன்றை எடுத்திருந்தனர். இதனை RCB யானது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘PLAY BOLD’ என கேப்சன் வைத்து சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த போட்டோவை தொடர்ந்து, தற்போது RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் போட்டோ ஒன்றை அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
இதில், விராட் கோலி RCBயின் லோகோ அமைந்த கோடியை தனது முதுகில் போர்த்திய படி, மேலே பார்ப்பது போன்று உள்ளது. இந்த போட்டோவுக்கு கேப்சனாக, ஒரு அரச பார்வையில், களமிறங்கத் தயாராக உள்ளார் என RCB பதிவிட்டிருந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்த RCB அணியானது, ஒரு முறை கூட பதக்கம் வென்றது இல்லை. இந்த குறையை எதிர்வரும் சீசன் மூலம், நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram