பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் சூழ்ச்சி செய்து அமிர்தா, நிலாவை கடத்திச் செல்கிறார். இதனால் பாக்கியா இந்த விஷயத்தை வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே பாக்கியா, அமிர்தா நிலாவை வெளியே அழைத்து செல்லக்கூடாது என கோபி சண்டை போட்டார்.
ஆனால் அதை மீறி பாக்கியா அமிர்தாவை வெளியே அழைத்துச் சென்றார். இதனால் கோபி உன்னால தான் செழியன், எழில் வாழ்க்கை நாசமா போச்சு. நீ எதுக்குமே லாயக்கு இல்ல. இப்போ அமிர்தா நிலா பாப்பாவை எப்படி கண்டுபிடிக்க போகிறோம் என்று சொல்லி சத்தம் போடுவாராம். அந்த நேரத்தில் ஈஸ்வரியும் பாக்கியாவை வாய்க்கு வந்தபடி பேசுவாராம். மேலும் குடும்பத்தில் உள்ள எல்லோரும் இந்த விஷயத்தில் பாக்கியாவுக்கு எதிராக நிற்பார்களாம்.