ச்சீ.., யாருக்கு யாரு டி அத்த.., ராதிகாவை விளாசிய ஈஸ்வரி.., நக்கலடிக்கும் செல்வி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!!

0
ச்சீ.., யாருக்கு யாரு டி அத்த.., ராதிகாவை விளாசிய ஈஸ்வரி.., நக்கலடிக்கும் செல்வி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!!
ச்சீ.., யாருக்கு யாரு டி அத்த.., ராதிகாவை விளாசிய ஈஸ்வரி.., நக்கலடிக்கும் செல்வி.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா சுடிதாரில் வருவதை பார்த்து கோபி ஜெனியிடம் உன் காலேஜ் பிரண்டு வந்துருக்கா போல என்னன்னு பாரு என்று சொல்கிறார். பின் அது பாக்கியா தான் என்று தெரிந்து ஷாக் ஆகிறார். அடுத்ததாக ஜெனி, செல்வி, பாக்கியா அனைவரும் கிச்சனில் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கு வந்து தனி அடுப்பு வாங்கி சமையல் வேலைகளை பார்க்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ராதிகா செய்யும் வேலைகளை பார்த்து செல்வி கிண்டல் அடிக்கிறார். இதை எதையுமே கண்டு கொள்ளாமல் ராதிகா எல்லாத்தையும் வெறுப்பேற்றுகிறார். பின் செல்வி ஈஸ்வரியிடம் கிச்சனில் நடக்கும் அனைத்தையும் சொல்ல அவர் கடுப்பாகி ராதிகாவை சத்தம் போடுகிறார். அதுக்கு ராதிகா உங்க பொருள்ல நா சமைக்கல. ஏன் பொருளில் தான் சமைக்கிறேன் அத்தை என சொல்ல ஈஸ்வரி என்ன அத்தனு கூப்பிட நீ யாரு. மொத வெளியே போ என கத்துகிறார். பின் ரூமில் இனியா கோபி பேசிக் கொண்டிருக்க அப்போது ராதிகா அங்கு வருகிறார்.

அப்பான்னு கூட பார்க்காமல் ஜர்னர்த்தனை திட்டி தீர்த்த மீனா.., உன்ட பணம் கூடவா இல்ல.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!

ராதிகா வருவதை பார்த்து இனியா எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார். அப்போது கோபியிடம் ராதிகா இனியாவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்ல என் பொண்ணு அப்படி எல்லாம் கிடையாது என்கிறார் கோபி. பின் இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்குகின்றனர். அப்போது ராதிகா மயூவை நினைத்து பீல் பண்ண கோபி இதுக்கு தான் நாம அங்க போலாம்னு சொன்னேன் என்கிறார். உடனே ராதிகா சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here