பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் புதிய ட்விஸ்ட் – வைரலாகும் புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இது ஒரு குடும்ப பெண் அனுபவிக்கும் பிரச்சனைகளை கூறும் கதையாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் குடும்ப தலைவியாக இருப்பவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் கோபி இவரை கொஞ்சம் கூட மதிக்காமல் தனது முன்னாள் காதலியான ராதிகாவுடன் சுற்றி வருகிறார். தற்போது இந்த சீரியலில் பாக்கியாவின் வீட்டிற்கு வரும் ராதிகாவின் மகள் மயூவிடம் பேச்சு கொடுக்கும் கோபியின் அப்பா, அவர்களின் திருமணம் குறித்து தெரிந்து கொள்கிறார்.

இப்படி ஒரு ட்ராக் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் அமிர்தா எழில் காதல் விவகாரம் ஓடி கொண்டுள்ளது. எழில் தன் காதல் விஷயத்தை அமிர்தாவின் அப்பா மற்றும் அம்மாவிடமே கூறிவிட்டார். முதலில் மறுத்த அவர்கள் பின்னர் எழில் கூறிய விஷயத்தை புரிந்து கொண்டு உங்கள் வீட்டில் சம்மதித்தால் நாங்களும் சம்மதம் தெரிவிப்பதாக கூறி உள்ளனர். இந்த நிலையில் எழிலின் காதல் ஜெயிக்குமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் எழில் அமிர்தாவின் குழந்தையுடன் போட்டோ ஒன்றை எடுத்து உள்ளார். மேலும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை திருமணத்திற்கு அமிர்தா சம்மதித்து விட்டாரோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் இடத்தில் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here