ஒட்டுமொத்த குடும்பத்தில் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயற்சிக்கும் பாக்கியா – வெளியான அதிரடி ட்விஸ்ட்!!

0

புரியாத புதிரா ஒவ்வொரு நாளும் புது புது ட்விட்ஸ்ட கொடுத்தா எப்படி? இப்டிலாமா ஒரு இயக்குனரால யோசிக்க முடியும். அப்டிங்குற அளவுக்கு ஜெட் வேகத்தில பாக்கியலட்சுமி சீரியல் கதையை பறக்க விட்டுட்டு இருக்கிறார். இப்பதான் கோபிய பத்தி எல்லா உண்மையும் பாக்கியாவுக்கு தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள டைவர்ஸ் ஆகி, கோபி வீட்டை விட்டு வெளிய போயி, ராதிகா கிட்ட கோபி உருட்டு உருட்டுனு உருட்டி அப்பப்பப்பா…என்னா ஸ்பீடு.

இது பத்தாதுன்னு ஜெனியோட அம்மா செழியனை வீட்டு மாப்பிள்ளையா வாங்கனு கூப்பிடாத கொற தான். இப்படி அவுங்க புது பிட்ட போட்டுட்டு நேத்து எபிசோடுல கிளம்புனாங்க. அத செழியனும் இதான் சாக்குன்னு சொல்லி கஷ்டமே இல்லாம ஜம்முனு மாமியார் வீட்டுல உட்க்கார முடிவு எடுத்துட்டாரு. ஆனா பொறுப்புள்ள ஜெனி இதுக்கெல்லாம் அசைறதா இல்ல. குடும்பத்துல எல்லாரும் கஷ்டத்துல இருக்கப்போ என்னால வீட்டை விட்டு போ முடியாது. நீ வேணும்னா எங்கனாலும் போ என மாஸ் காட்டினார் ஜெனி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்த நாள் காலையில ஸ்கூலுக்கு கிளம்புன இனியா ஜெனி மூலமா பாக்கியாவை கூப்பிட்டு, ஸ்கூல் பீஸ் கட்டணும்னு கேட்கிறார். அதுக்கு பாக்கியா இப்படி திடுதிப்புனு சொன்னா எப்படி என கேட்க, இனியா பெரிய சவால் மட்டும் விட்டா பத்தாது என சொல்லி நக்கலடிக்கிறார். பாக்கியாவும் பாவம் என்ன செய்யறதுன்னு தெரியாம செல்வியிடம் புலம்புகிறார்.

அதுனால ராமமூர்த்தியும் நான் உதவுறேன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள ஈஸ்வரி எல்லாத்தையும் நீங்க பார்த்தா அப்புறம் அவ விட்ட சவால் என்னாகுறது? விடுங்க அனுபவிக்கட்டும்னு சொல்லி முடிக்கிறார். இந்நிலையில் தற்போது பாக்கியா தற்கொலைக்கு முயற்சித்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி பீதியை கிளப்பியுள்ளது. இது மார்பிங் தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?? என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here