பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது இனியா பாக்கியாவின் கனவை நிறைவேற்றி குடும்பத்தையே சந்தோஷப்படுத்தி விட்டார். அதாவது, +2 பொதுத்தேர்வில் சிறந்த கோச்சிங் டீமில் செலக்ட்டாகி விட்டார். இதனை கேட்டு குடும்பமே கொண்டாடி வருகிறது. இனியா பாக்கியாவை ஸ்கூலுக்கு அழைத்து செல்கிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
டீச்சரிடம் பாக்கியா சகஜமாக ஆங்கிலத்தில் பேசி விடுகிறார். இதனை குடும்பமே பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். மேலும் மேடையில் இனியாவை அழைத்து அனைவரும் பாராட்டுகின்றனர். சாதாரணமாக படிக்கும் மாணவியாக இருந்த இவர் இந்த அளவுக்கு பெஸ்ட் Student-ஆக உயர்ந்து விட்டார் என்று சொல்ல குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் சந்தோசம்.
அதுமட்டுமில்லாமல் கோபி தூரத்தில் இருந்து தனது மகளின் திறமையை பார்த்து பூரிப்படைந்து நிற்கிறார். அனைவரிடமும் இது தன்னுடைய மகள் என்றும் கூறுகிறார். இப்படி ராதிகா மேல் ஆசைப்பட்டு, குடும்பத்தையே இழந்துடீங்களே கோபி என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இனியா தனது அம்மாவை மட்டுமே பெரிதாக நினைத்தாரே தவிர, அப்பாவை கண்டுகொள்ளவே இல்லை.