பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த அமிர்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
பாக்கியலட்சுமி அமிர்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில் நடிகர் சஞ்சீவுக்கு தங்கையாக அறிமுகமானவர் ரித்திகா. இந்த தொடரில் கார்த்திக்கு தங்கையாக நடித்து வந்த நடிகை வைஷாலி விலகியதை அடுத்து, நடிகை ரித்திகா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பிறகு வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் கிடைத்தது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமும் பிரபலமானார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இது எழிலுக்கு தான் அதிக வரவேற்பு.
எழில் அம்மாவின் செல்ல பையன் என்பதால் அவரது கதாபாத்திரம் மக்களை வெகுவாக இழுத்தது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அமிர்தாவிற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் தான் தனது புகைப்படங்களை அதிகம் இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.
அவர் எதிர்பார்த்தது போல நிறைய ரெஸ்பான்ஸ். இன்ஸ்டாவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளனர். தற்போது அவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் யாவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.