போபால் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் தான் தினமும் மாட்டு சிறுநீர் குடிப்பதால் தனக்கு கொரோனா வரவில்லை என்றும் மேலும் இவ்வாறு செய்வது பல்வேறு வகையான தொற்று நோய்களில் இருந்தும் தன்னை பாதுகாப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
2டிஜி கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் தொகுப்பு மே 27 ஆம் வந்தடையும் – DRDO தலைவர்!!!
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் சுனாமி அலைகள் போல மக்களை தாக்கி வருகிறது. இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு இந்தியாவில் 3.11 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.இந்நிலையில் மத்திய பிரதேச தலை நகரான போபாலில் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
நான் பசுவின் சிறுநீரை தினமும் குடிப்பதாகவும், இந்நாள் வரை தனக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை என தெரிவித்து உள்ளார். இதனால் தான் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளவதில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.மேலும் இவர் நாட்டு மக்கள் அனைவரும் ஆலமரம்,துளசி போன்றவைகளை வளர்க்க வேண்டும். எனவே அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. கூடிய விரைவில் போபாலில் 1 கோடி மரங்கள் நடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.