பல நாட்களாக பாக்கியாவிடம் இருந்து மறைத்து ராதிகாவுடான உறவை வளர்த்து வந்த கோபி தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
பிரபல இயக்குனரின் பட வாய்ப்பை இழந்த சிவகார்த்திகேயன் – ச்ச.. கடைசியில என்ன இப்படி ஆகிடுச்சு!!
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடர் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பல மாதங்களாகவே கோபி குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு ராதிகாவை சந்தித்து வந்தார். தற்போது கோபியின் அப்பா மற்றும் எழிலுக்கு கோபியின் விஷயம் தெரிந்து விட்டது. ஆனாலும் கோபி ராதிகாவின் சந்திப்பை மட்டும் நிறுத்தவே இல்லை. எப்போது கோபி பாக்கியாவிடம் மாட்டுவார் என்று பல மாதங்களாக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் பொங்கல் கொண்டாட்டம் முடிந்துள்ளது. கொண்டாட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் கோபி, ராதிகாவிற்கு கால் செய்து உன்னை பார்க்காமல் நான்கு நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன். மிஸ் யூ உன்னை பார்க்க தவித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இவர் ராதிகாவிடம் பேசியதை பாக்கியா கேட்டுவிட்டார். இதன் மூலம் இனி விறுவிறுப்புடன் அடுத்து வரும் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட உள்ளன.
Am i joke to you..❓
பாக்கியலட்சுமி – இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/cL7cexZxQx
— Vijay Television (@vijaytelevision) January 19, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்