காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா & போபண்ணா ஜோடி…, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரம்!!

0
காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா & போபண்ணா ஜோடி..., அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரம்!!
காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா & போபண்ணா ஜோடி..., அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரம்!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரட்டையர்க்கான கலப்பு பிரிவில் இந்தியாவின் சீனியர் நட்சத்திர வீரர்களான, சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா கலந்து கொண்டனர். இதில், முதல் சுற்றில், ஆஸ்திரேலியாவின் லூக் சவில்லே மற்றும் ஜெய்மி ஃபோர்லிஸ் ஜோடியை எதிர்த்து இந்திய ஜோடி போட்டியிட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், (7-5, 6-3) 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2வது சுற்றில், இந்திய ஜோடி இன்று, உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் நினோமியா ஜோடியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், ஆரம்பம் முதலே இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

ஐசிசி T20.., பெஸ்ட் XI னில் விராட் கோலி, சூர்யகுமார், மந்தனா, தீப்தி!!

இதனால், 6-4, 7-6(11-9) என்ற புள்ளி கண்ணகில் அபாரமாக தொடர்ந்து 2 செட்டுகளை கைப்பற்றியது. இந்த போட்டியில், சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றதால், காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் மற்றும் லாட்வியாவின் ஜெசினா ஓஸ்டாபென்கோவை இந்திய ஜோடி எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here