தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் தாய்மொழியில் பயின்று வளர்ந்தவர்கள் தான். இதனால் உலக அளவில் தமிழ்மொழி சிறப்பை உணர்த்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மாநில மொழிகளில் வாதாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார். அப்போது தான் சாமானிய மக்களுக்கும் நீதித்துறைக்கு உள்ள நெருக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரலையாக மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மகத்தான திட்டங்கள்.., ஜனவரி 28ம் தேதி முதல் தொடக்கம்!!!!
இதில் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட், அண்மையில் வழக்கறிஞர் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது “உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.