இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் பின்னர் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி மரியாதை:
இந்தியாவில் 3 முறை பிரதமராக பதவி வகித்த சிறப்புக்குரியவர் வாஜ்பாய். பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவரான இவர் பல தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். இவரது பிறந்தநாள் (டிசம்பர் 25) தேசிய நல்லிணக்க நாளாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது. அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று முக்கிய பாஜக தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சிட்னி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘யார்கர்’ நடராஜன் !!
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தலைவர்கள் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.