குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் ரிஷபம், கடகம், கன்னிக்கு குருபார்வை – ஆன்மீக விளக்கம்!!

0

குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி நடந்துள்ளது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ரிஷபம், கடகம், கன்னி ஆகிய மூன்று ராசிகளை குருபகவான் பார்க்கிறார். குரு இடப்பெயர்ச்சி அடைவதால் என்ன நடைபெறுகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

குருபெயர்ச்சி:

பொதுவாக குருபகவான் ராசியில் உச்சமாக இருக்கும் பொழுது பல நன்மைகள் நடைபெறும். நம் வாழ்வின் அடுத்தகட்ட நிலைக்கு செல்ல குருபகவான் உதவுகிறார். சிறுவராக இருந்தால் நல்ல கல்வி அமைவது, இளைஞராக இருந்தால் நல்ல வாழ்க்கை துணை அமையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுபோன்ற, அடுத்தகட்ட நிலையை அடைவது குருபகவான் வேலையாகும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

குருபகவான் 5-ல் இருக்கும் ராசிக்காரர்கள், குருபகவான் நீசமாக இருக்கும் ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு குருபகவான் தனுசு ராசி உத்திராடம் 1-ம் பாதத்திலிருந்து மகர ராசி உத்திராடம் 2-ம் பாதத்திற்கு சென்றுள்ளது. இது வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது.

திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5-ம் நாள் நவம்பர் 20 தேதி நிகழ்கிறது. குருவின் பார்வை மகர ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசியை பார்க்கிறது. இதனால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் குருவின் பார்வை அதிகமாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்:

ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் குரு அமைந்துள்ளார். தெய்வ வழிபாடுகளையும், சன்னதியையும் குறிக்கிறது. ஆன்மிகம் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நகை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். அரசு வேலை கிடைக்கும். அரசியலில் இருந்தால் மேன்மை அடைவீர்கள்.

கடகம்:

ஏழாம் இடம் காளத்திய குரு. கடந்த காலத்தில் இருந்த கஷ்டங்கள் தீரும். கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மௌனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். பொறுமையாக அனுசரித்து செல்ல வேண்டும்.

கன்னி:

பூர்வ புண்ணிய குரு ஐந்தாம் இடத்தில் இருப்பது யோகம். இந்த வருடம் நீங்கள் தான் முதல் இடம். திருமணம் கைகூடி வரும். இருப்பினும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு அதிசாரமாக செல்ல இருப்பதால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நிறைவேறாமல் போகலாம். சில பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here