ஒரே நாளில் 4 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்…, ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரும் வேட்டை!!

0
ஒரே நாளில் 4 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்..., ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரும் வேட்டை!!
ஒரே நாளில் 4 பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்..., ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரும் வேட்டை!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் ஒரே நாளில் 4 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

ஜோர்டானின் அம்மனில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய வீரர்களான, சுமித் மற்றும் நரேந்தர் காலிறுதியில், தாய்லாந்து மற்றும் ஈரான் வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தனர். இந்த அரையிறுதி போட்டியில், 75 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவின் சுமித் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தான் ஜாஃபரோவ் சைட்ஜாம்ஷித்தை எதிர்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்தியாவின் சுமித் 0-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே போல, 92+ கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நரேந்தர் உஸ்பெகிஸ்தான் வீரரை எதிர்கொண்டு 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் முகமது ஹுசாமுதீனின் காலிறுதியில் கண்ணுக்கு மேல் பட்ட காயம் சரியாகாத காரணத்தால், அரையிறுதி போட்டியில் கலந்து கொள்ளாமல் வெண்கலப் பதக்கத்துடன் முடித்து கொண்டார். இதே போல் 48 கிலோ எடைப்பிரிவில், கோவிந்த் குமார், கஜகஸ்தான் வீரரிடம் 0-4 என தோல்வி அடைந்தார்.

தோனி தலைமைக்கு பிறகு உலக கோப்பை கனவு அவ்வளவுதானா?? விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடியும் ரசிகர்கள் ஏமாற்றம்!!

இதனால், இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, மற்றொரு அரையிறுதி போட்டியில், ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிவ தபா, தஜிகிஸ்தான் வீரரை எதிர்த்து 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here