தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை பார்வையிட தேர்வாகியுள்ளார்.
இணையதளம் மூலம் தேர்வு
சதீஷ் குமார் – தீபா தம்பதியினரின் மகளான லட்சுமி பிரியா அங்குள்ள எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலை பள்ளியில் உயிரியல் கணிதம் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்புப் படித்து வருகிறார். அமெரிக்க விண்வெளி வீரர் டான் தாமஸ் பள்ளிகளில் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பார்த்த மாணவிக்கு நாசா விண்வெளி மையத்தை பார்வையிட எண்ணம் வந்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
இதற்காக ஆசிரியர்களும், நண்பர்களும் மற்றும் பெற்றோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.