பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா தனது மகள் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கியவர் தான் அர்ச்சனா.
சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என இவர் வேலை பார்க்காத சேனல் கிடையாது. அதே சமயம் பல படங்களில் சைடு ரோல்களிலும் நடித்திருந்தார். சின்னத்திரை, வெள்ளித்திரை என ஆல் ரவுண்டராகவே வலம் வருகிறார் அர்ச்சனா. இவர் மட்டுமில்லாமல் இவரது மகளான சாராவும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
சில சமயங்களில் சாரா வயதுக்கு மீறி பேசுவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருவது வழக்கமான ஒன்று தான். அதையும் தாண்டி சாராவிற்கு இன்னொரு பிரச்சனை இருப்பதாக அர்ச்சனா கூறியுள்ளார். அதாவது சாரா சினிமா துறையில் இருப்பதால் அவருக்கு நண்பர்களே கிடையாதாம்.
வாழ்க்கையில் நண்பர்கள் என்பது ரொம்பவே முக்கியான விஷயம் அதுவே சாராவுக்கு கிடைக்கல என்று கண்ணீர் விட்டுள்ளார் அர்ச்சனா. ஆனால் சாராவோ தன்னுடைய அம்மா தான் தனக்கு எல்லாமே என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.