இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழக மக்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து இருந்தனர். தற்போது இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணைய சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி ஆன்லைன் மூலம் நில அளவைக்கு விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். இதன் பின்னர் நில அளவைக்கு உரிய தேதிகள் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும். அதேபோல் நில அளவை செய்த பிறகு கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தை இணையதளம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த இடத்திற்கு செல்ல தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!