தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அண்ணாத்த:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் தான் அண்ணாத்த. கொரோனா நோய்பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இழுபறியாக இருந்து வருகிறது. ஏற்கனவே கொரோன தொற்று காரணமாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு பாதியிலே நின்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதன் எதிரொலியாக தற்போது ஐதராபாத் மாநிலத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தக்க கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக படக்குழுவினர் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது படப்பிடிப்பு வெளியாவதில் தாமதமாகும் என்று எண்ண படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பரவல் எதிரொலி – புனேவில் இருந்து 3.5 லட்ச தடுப்பூசிகள் வருகை!!
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக நாளை சூப்பர் ஸ்டார் ரஜினி ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார். மேலும் இறுதி கட்டமாக 20 நாட்கள் கொல்கத்தாவில் அண்ணாத்த படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.