கொரோனா சிகிச்சைக்கு போதுமான இட வசதிகள் இல்லாத நிலையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் பயன்படுத்தும் விடுதியை சிகிச்சை வழங்க தர வேண்டும் என்று ஆணையர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா வின்ப தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இடவசதி அனைவருக்கும் செய்து தர முடியாத நிலையில் உள்ளது சென்னை மாநகராட்சி. மேலும், அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் பள்ளி கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மருத்துவ முகாம் ஆக மாற்றப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளில் மேலும் 3 மாத இலவச பொருட்கள் – அமைச்சர் காமராஜ் தகவல்..!
அண்ணா பல்கலைக்கழகவிடுதி:
இதன் காரணமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் இருக்கும் விடுதியில் சிகிச்சை வழங்க ஆணையர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. ஆனால் விடுதியில் மாணவர்களின் உடைமைகள் அதிகமாக இருப்பதாகவும் தற்போதைக்கு ஒப்படைக்க முடியாது என்பதாகவும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆணையாளர் கூறுகையில் “குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் பள்ளி, கல்லூரிகள், அரசு கட்டிடங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அதனால் அண்ணா பல்கலைக் கழகத்தை ஒப்படைத்து ஆக வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.