தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இத்தனை நாட்கள் அனிதா எப்பொழுது வெளியேறுவார் என்று காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு பேசும் மகிழ்ச்சியாக அனிதா நேற்று வெளியேறினார். தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் அனிதா
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். மக்கள் மத்தியில் ஏற்கனவே அவர் மிகவும் பிரபலமாக இருந்தார். அனிதா சம்பத் என்றாலே ஒரு தனி மரியாதையும் இருந்தது. விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். வந்த இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த அனிதா தனது சுயரூபத்தை கட்ட ஆரம்பித்தார்.
ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். அனிதாவா இது? எனவும் ஆச்சரியமாக பார்த்தனர். இதனால் மக்களுக்கும் அனிதாவை பிடிக்காமல் போனது. ஆரம்ப காலத்தில் அவர் காட்டிய திறமைகளை தொடர்ந்து காட்டியிருந்தால் கண்டிப்பாக இறுதி சுற்று வரை செல்ல வாய்ப்பிருந்திருக்கும்.
அவரே அவரின் வாயால் சூனியம் வைத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். நேற்று அனிதா தான் வெளியேற வேண்டும் என பலரும் நினைத்தது நடந்தேறியது. ஆரியை கடுமையாக பேசியதும் மக்களுக்கு பிடிக்காமல் போனது. புஷ்பா புருஷன் என்பது போல அனிதா புருஷன் என்று கேலி செய்தும் வருகின்றனர்.
Thanks for everything ??
— Anitha Sampath (@anithasampath_) December 26, 2020
வீட்டுக்குள் இருந்தபோதே அவ்வளவு பதட்டப்பட்டவர் அவரை வெளியில் கலாய்க்கிறார்கள் என்று தெரிந்தால் என்ன ஆகப்போகிறாரோ?? என பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது ‘எல்லாவற்றிற்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.