விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் அன்புடன் குஷி சீரியலும் ஒன்று. தற்போது செல்வியின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு காரணம் குஷி தான் என்று, அன்புவின் வீட்டில் சலசலப்பு உருவாகிறது. இதனால் மனவருத்தத்தில் குஷி இருக்கிறாள்.
அன்புடன் குஷி:
இன்று கோவிலுக்கு சென்ற குஷியையை அவள் அம்மா மாதவி பார்த்து விடுகிறார். குஷியிடம் நலம் விசாரிக்கிறார். குஷியும் தான் நலமாக இருப்பதாக கூறுகிறார். இருப்பினும், குஷியின் முகவாட்டத்தை அறிகிறார் மாதவி.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
உன் முகவாட்டத்திற்கு காரணம் என்ன என்று கேட்க குஷி, செல்வியின் திருமணத்திற்கு செல்வியின் மாமியார் பணம் கேட்டதையும் அதற்காக அன்பு பாக்சிங் இல் கலந்து கொண்டதையும் அதன்மூலம் வந்த பணத்தை சுதீஷ் கள்ளநோட்டு என்று போலீசிடம் புகார் செய்ததையும், அதன் விளைவாக தானே அந்த பணத்தை எடுத்து எரித்துவிட்டதாககவும் சொல்கிறாள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
செல்வியின் மாமியார் மீண்டும் 1 லட்சம் கேட்டதையும், அதன் பின் மாப்பிளை பணம் வாங்கினால் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று கூறியதால் தான் இந்த திருமணமே நடந்தது என மாதவியிடம் கூறினாள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிறகு செல்வியை அவள் மாமியார் பணம் தரும் வரை செல்வி இங்கையே இருக்கட்டும் என அன்பு வீட்டில் விட்டு சென்றதையும் கூறுகிறார். அதனால் ஆத்திரமடைந்த மாதவி நீ நகையை செல்வி மாமியாரிடம் கொடுத்ததை சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அதற்கு ஆதாரமும் இல்லை என குஷி கூறுகிறார்.
மேலும் இதனை சொன்னால் அன்புவின் கோபத்தினால் செல்வியின் வாழ்க்கை போய்விடும் என்ற காரணத்தினாலும் நான் சொல்லவில்லை என்று கூறுகிறார் குஷி. குஷியின் மனபக்குவதையும், அவளது இந்த நிலையை கண்டும் வருந்துகிறாள் மாதவி. இருவரும் சன்னதிக்கு சாமி கும்பிட செல்கின்றனர்.
அப்போது குஷி, தன் தாலிக்கு குங்குமம் வைப்பதையும், அதை கண்ணில் ஒற்றிக்கொள்வதையும் பார்த்து சந்தோசப்படுகிறாள் மாதவி. அன்பு கையால் நீ தாலி வாங்கும் நாளும் வரும் என மாதவி கூற, குஷி வெக்கத்துடன் அன்பு தனக்கு தாலி காட்டியதை சொல்கிறாள். அதனை கேட்ட மாதவி மகிழ்ச்சியடைகிறாள.
பின்பு குஷியை ஆசீர்வதித்து அழகுபார்க்கிறாள் மாதவி. பிறகு, குஷி வெறும் தாலியுடன் இருப்பதை பார்த்த மாதவி, அவளுக்கு தன் கழுத்திலிருந்த செயினை போட்டுவிடுகிறாள். இருவரும் சந்தோசமாக வீடு திரும்புகின்றனர்.
குஷி வீட்டிற்கு வந்ததும், ராஜிக்கு பிரசாதத்தை கொடுக்கிறாள். மகளின் வாழ்க்கை பாழான காரணத்தினால் குஷியிடம் கோபப்படுகிறாள் ராஜி. இதனை பார்த்த அன்பு குஷியின் நிலையை நினைத்து வருந்துகிறான். குஷி தன் அறைக்கு வந்ததும் கோவிலுக்கு சென்ற அவளிடம் பிரசாதம் கேட்கிறான் அன்பு, இதனால் சந்தோஷத்தில் கண்கலங்குகிறாள் குஷி. இதோடு இந்த எபிசோடு முடிந்தது.