தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகம் மாற்றமின்றி வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகம்
தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் மலிவு விலையில் சாப்பாடு வழங்க தொடங்கப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழகம் முழுவதும் 407 இடங்களில் அம்மா உணவகத்தை கொண்டுவந்தார். இத்திட்டத்தை சென்னையில் இருந்து பணிபுரியும் பேச்சுலர்ஸ் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகள் பலரும் வரவேற்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது அம்மா உணவகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் அ.தி.மு.க.வினர் அம்மா உணவகம் பெயரை மாற்ற தி.மு.க.வினர் முயன்று வருவதாக சர்ச்சை எழுந்து வருகிறது. இந்த சர்ச்சையால் உணவகத்தில் பணிபுரிந்து வருவோர் யாருக்குமில்லாமல் பொதுவாக பேரறிஞர் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்து உணவகத்தை தொடர்ந்து செயல்பட செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுற்றுலா செல்ல விருப்புபவர்களுக்கு குட் நியூஸ்.., விடுதி அறைகளை புக்கிங் செய்ய புதிய வசதி!!
இந்நிலையில் அம்மா உணவகம் எப்போதும் போல் இயல்பாக செயல்படும் எனவும், செயல்பாட்டில் இல்லாத உணவகங்களை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படும் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.