தமிழக விளையாட்டு துறையில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன. இவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என முன்பு அரசு அறிவித்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் படி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டை சேர்ந்த, பதக்கம் வென்றவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதன் படி, இந்த சிறப்பு உதவித்தொகை பெற தகுதி உடையார், நாளை முதல் டிசம்பர் 15 ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு பயிற்சியாளர்களை மாற்றிய பிசிசிஐ…, முழு விவரம் உள்ளே!!
அடுத்த இரண்டு ஆண்டுகளில், போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க தகுதியுடையோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இணையத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கலிலிருந்து, உயர்மட்ட குழு தேர்வு செய்யும் வீரர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஓராண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு [email protected] என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.