குளிர் காலமோ, கோடை காலமோ, நம்மளுடைய முகம் வறட்சி மற்றும் வெப்பத்தின் காரணமாக டேமேஜ் ஆக அதிக வாய்ப்பு இருக்கும். அதனால் செம்பருத்தி பூவை அதை எப்படி செய்யலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை:
செம்பருத்தி ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு ஐந்திலிருந்து ஏழு செம்பருத்தியின் இதழ்களை எடுத்து அரைத்து கொள்ளவும். அதோடு சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளவும். இத்தோடு ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த செம்பருத்தி ஃபேஸ் பேக்கை உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக அப்ளை செய்து கொள்ளவும் பிறகு 15 நிமிடம் கழித்து அதனை குளிர்ந்த தண்ணீர் வைத்து மசாஜ் செய்வது போல் முகத்தை கழுவி விடவும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து உங்கள் முகத்தை நன்றாக துடைத்து விடவும். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்து வரும் நிலையில் உங்கள் பேஸ் பொலிவாக வருவதை உங்களால் உணர முடியும் , ட்ரை பண்ணி பாருங்க.