இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் மற்றும் பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக புதிய வேளான் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டுகளை வைத்து தாக்கினார்கள். தொடர்ந்து வன்முறை காரணமாக ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிங்குவில் உள்ள சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளுடன் வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டில்லி – ஹரியானா ஆகிய எல்லை பகுதிகளில் தற்காலிக சிமெண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்டர்நெட் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது மத்திய அரசு.
பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் – முதல்வர், துணை முதல்வர் ட்வீட்!!
இந்நிலையில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் அமெரிக்காவை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்பவர் விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் நிற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து பிரபல அமெரிக்கா பாடகி ரிஹானா விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் போது விவசாயிகள் போராடி வரும் பகுதிகளில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை குறிப்பிட்டு “இது குறித்து ஏன் நாம் யாரும் பேசவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். உலக தலைவர்கள் பலர் இந்திய விவசாயிகளுக்கான ஆதரவை கொடுத்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரின் பதிவுகளும் விவசாயிகளுக்கான போராட்டம் உலக கவனத்தை பெற்று தரும் என கருத்துக்கள் நிலவுகிறது.