தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி தமிழகத்தின் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்ணா நினைவு தினம்
திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களை அவர் தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழை சுவாசித்தவர். தமிழை நேசித்தவர். ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவு அஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.