இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக இருந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோணி பவுசி அதிர்ச்சியான தகவல் ஒன்றை பிறப்பித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மிக கடுமையாக மக்கள் அனைவரையும் பாதித்து வந்தது கொரோனா நோய்பரவல். இதன் காரணமாக நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் மே மாத தொடக்கம் வரை கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு பல தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நாளடைவில் கொரோனா பரவல் குறைந்ததால் அதிக அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் இரண்டாவது அலையாக மாறி மக்கள் அனைவரையும் மிக கடுமையாக பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது இருக்கும் இரண்டாவது அலை கடுமையாக இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி பவுசி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
14வது ஐபிஎல் தொடர் – கேப்டன் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்!!சோகத்தில் ரசிகர்கள்!!
அதன்படி அவர் கூறியதாவது, இந்தியாவில் மிக கடுமையான நிலை இருந்து வருகிறது. இதனை சரி செய்வதற்கு 6 மாத கால அளவிற்கு நீண்ட ஊரடங்கு இல்லாமல் தற்காலிகமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். மேலும் மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிசன் போன்ற முக்கிய மருத்துவ பொருட்களை அவசர தேவையாக பெற்று அதனை விரைவாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.