14வது ஐபிஎல் தொடர் – கேப்டன் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்!!சோகத்தில் ரசிகர்கள்!!

0

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் மெகா தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஐதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்து வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வார்னர்:

இந்தியாவில் கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பான முறையில் 14வது ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல விதமான திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. சென்னை அணி பேக் டு பார்ம், பெங்களூர் அணி அதிரடியான தொடக்கம் போன்ற பல விஷயங்கள் தொடர்ந்து அரங்கேரி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் ஐதராபாத் அணி இந்த முறை தொடர்ந்து பல ஆட்டங்களை சொதப்பி வருகிறது. இதுவரை இந்த அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 1 முறை மட்டுமே தனது வெற்றியை ஐதராபாத் அணி பதிவு செய்துள்ளது. இந்த தொடரில் இந்த அணி மிக மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஐதராபாத் அணி ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுக்கு ஆளப்போவது யார்?? தமிழகத்தில் திக் திக் திக்..!!

மேலும் இந்த அணியின் நட்சத்திர நாயகன் நடராஜன் காயம் காரணமாக விலகியுள்ளார். இதுவே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது இந்த அணியின் கேப்டனாக திகழ்ந்த வார்னர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாறாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here