அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக டெல்டா ரக கொரோனவால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 1017 பேர் கொரோனவால் உயிர் இழந்துள்ளனர்.
உருமாறிய டெல்டா வைரஸ் தொற்று பாதிப்பால் பல உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது வரை உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரக்கணக்கானோர் பேர் இத்தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் தான் அமெரிக்காவில் கொரோனா தினசரி உயிரிழப்பு 1000 ஆக பதிவாகியுள்ளது. தற்போது நேற்றும் 1000திற்கும் அதிகமாக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்