சின்னத்திரை நடிகையான ஆலியா மானசா குழந்தை பிறந்ததால் சிறிது காலம் பிரேக் எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆனால் எந்த சீரியல், எந்த சேனல் என்பது மட்டும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஏற்கனவே ராஜா ராணி வெற்றிக்கு பிறகு நீண்ட காலமாக சீரியலில் என்ட்ரி கொடுக்காமல் இருந்தார். ஐலா பாப்பா அப்பொழுது பிறந்திருந்த சமயம் என்பதால் அதிக உடல் எடையால் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தனது விடாமுயற்சியால் உடற்பயிற்சி செய்து 15 கி வரை எடையை கம்மி செய்து ராஜா ராணி 2 சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
ஆனால் மறுபடியும் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த சீரியலை விட்டு விலகி விட்டார் ஆலியா. இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் சீரியலில் களமிறங்குவதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். மேலும் சன் டிவியில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் ஏற்கனவே கசிந்திருந்தது.
ஆனால் இப்பொழுது ஆலியா தீவிரமாக உடற்பயிற்சி செய்வதை பார்த்தால் இன்னும் 2 மாதங்களில் சீரியல் ஆரம்பமாகி விடும் என்று தான் தெரிகிறது. ஏற்கனவே சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் பிரபலமாக நடித்து வருகிறார். அப்படி பார்த்தால் ஆலியாவும் இப்படி களமிறங்கி விட்டால் கண்டிப்பாக சஞ்சீவுக்கு டப் கொடுப்பார். ஒற்றுமையாக இருந்த இந்த ஜோடி இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுட்டாங்களே.