விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாக TRP யில் கலக்கி வருகிறது. ரசிர்களும் ராதிகா-கோபி திருமண எபிசொடுக்காக வைட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
அதிரடி செயல்:
திருமண மண்டபத்திற்கு பாக்யா, செல்வி, ஜெனி மூன்று பேரும் ஒரே பைக்கில் போகும் போது, போலீஸிடம் மாட்டி கொண்டனர். அப்போது செல்வி, ஜெனிக்கு உடம்பு சரியில்லை என்று போலீசிடம் சொல்லி சமாளிக்க, அங்கிருந்து மூவரும் கிளம்பி விட்டனர். இதையடுத்து மண்டபத்திற்கு வந்த பிறகு மேனேஜரை மூவரும் பார்த்துவிட்டு, திருமணத்திற்கு சமைக்க சென்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின்னர், சமையல் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் ராதிகா வீட்டில் அனைவரும் திருமணத்திற்கு கிளப்புகின்றனர். இருப்பினும் கோபி வராததால் ராதிகா குடும்பத்தினர் பதற்றமாக இருந்த சமயத்தில், கோபி வீட்டுக்கு வந்து விடுகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மா, சீக்கிரம் மண்டபத்திற்கு கிளம்பலாம் என்று அனைவரையும் அவசர படுத்துகிறார். இந்த பக்கம் மண்டபத்தில் வெளியில் இருக்கும் மணமகன், மணமகள் பெயரை,செல்வி பார்த்துவிட்டு பாக்கியவிடம் “இது சார் கல்யாணம் தான்” என்று கூறுகிறார்.
வெண்பாவின் செயலால் முடிவில்லா தொடர் கதையாகும் பாரதி கண்ணம்மா.., எல்லாம் மனச தேத்திக்கோங்க பா!!
இதை தொடர்ந்து மயூ மூலமாக கோபிக்கு தான் திருமணம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார் பாக்கியா. இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். இருப்பினும் தன் தொழில் மீது உள்ள பக்தி காரணமாக கணவன் திருமணமாக இருந்தாலும் பரவாயில்லை, தனக்கு கிடைத்த சமையல் ஆர்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சமைக்க சென்றுவிட்டார். இதையடுத்து என்ன நடக்கும்? கல்யாணத்தை நிறுத்த ராமமூர்த்தி வருவாரா? பல திருப்பங்களுடன் எபிசோடுகள் வர உள்ளன.