தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதி குறித்து மதுரை ஐகோர்ட் கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா:
மதுரையில் ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் தொற்று மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரையில் மிக அதிகமான அளவில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. இதனால் ஆண்டு தோறும் கோலாகலமாக நடந்து வரும் சித்திரை திருவிழாவிற்கு கடந்த வருடம் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தமிழகத்தில் தற்போதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது. அதில் பேருந்துகளில் நின்று பயணிப்பதற்கு தடை, கோவில் போன்ற மதசார்ந்த திருவிழாவிற்கு தடை என்று பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடமும் சித்திரை திருவிழாவிற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!
இதனால் திருவிழாவை காண காத்துக்கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க கூறி மனு கொடுக்கப்பட்டது. தற்போது இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா பரவலுக்கு மத்தியில் இதற்கு அனுமதி வழங்குவது சாத்தியமற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது.