தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!

0

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 20)முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து சேவை:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இருந்தும் தமிழகத்தில் கொரோனாவின் வேகம் மிக அதிகமான அளவில் இருந்து வந்தது. இதனை குறித்து ஆலோசித்த தமிழக அரசு தமிழகத்தில் வருகிற 20ம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இரவு நேர ஊரடங்கின் போது தமிழகத்தில் அத்யாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அரசு மற்றும் தனியார் மாநில/மாவட்ட போக்குவரத்திற்கு தடை என்றும் அறிவித்தது. தற்போது இதனை தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷை உரித்து வைத்திருக்கும் “குக் வித் கோமாளி” பிரபலம் – ஷாக்கான ரசிகர்கள்!!

இதன் காரணமாக ஊரடங்கு நாட்களில் காலை 4 மணி முதல் 10 மணி வரை அரசு விரைவு பேருந்துகள்(SETC) இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தது. நாளை முதல் விரைவு பேருந்துகள் பகல் நேரத்தில் இயங்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்று மாற்று ஏற்பாடை செய்துகொள்ளலாம் அல்லது டிக்கட்டிற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here