‘உன்ன இப்போ அடுச்சது சௌந்தர்யா மகன்னு நெனச்சியா உன்னோட புருஷன் டி’ – கண்ணம்மாவை புரிந்துக்கொண்ட பாரதி!

0

தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா. தற்போது அந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவை புரிந்துகொண்ட ஒன்று சேர்ந்துள்ளார். அதற்கான எபிசோடு வெளியாகியுள்ளது.

கார்த்திகை தீபம்(பாரதி கண்ணம்மா)

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் சதித்திட்டதால் பாரதி கண்ணம்மாவை தவறாக புரிந்துகொண்ட பிரிந்துள்ளார். எப்படியும் பாரதியை திருமணம் செய்துக்கொண்டே ஆக வேண்டும் என்றும் பல வேலைகளையும் செய்து வருகிறார் வெண்பா. ஆனால் சௌந்தர்யா அமைதியாகவே இருந்து பல வேலைகளை செய்து தற்போது கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை லக்ஷ்மியை பாரதியிடம் சேர்த்து வைத்து விட்டார்.

பாரதிக்கும் லக்ஷ்மியை பார்க்க எதோ ஒரு உணர்வு தோன்றுவதாக சொல்லும் அளவிற்கு வந்து விட்டது. இப்படி இருக்க கண்ணம்மாவும் பாரதியும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் தெலுங்கு ரீமேக் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும்.

கார்த்திகை தீபம் சீரியலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்போது அந்த சீரியலில் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என்ற உண்மை தெரிய வருகிறது. கண்ணம்மாவும் இரண்டு குழந்தைகளை அழைத்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். ஹேமாவை பிரிய முடியாத கார்த்திக்(பாரதி) தீபாவுடன்(கண்ணம்மா) தங்குகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!

தீபாவுடன் ஹோட்டல் வேலைகளையும் செய்கிறார். இதனை பார்த்த வெண்பாவிற்கு சரியான காண்டாகிறது. ஆனால் கார்த்திக் தீபாவை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறார். தீபா தனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாதை தெரிந்து கார்த்திக் தீபாவை திட்டுகிறார். ஆனாலும் தீபா கேட்கவில்லை. கன்னத்தை சேர்த்து அறைகிறார். ‘உன்ன இப்போ அடுச்சது சௌந்தர்யா மகன்னு நெனச்சியா உன்னோட புருஷன் டி’  என்று சொன்னதும் தீபா கண்கலங்கி காத்திக்கை கட்டிப்பிடிக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here