பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் முல்லையும், கண்ணனும் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கண்ணன்
குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் மக்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதிலும் முல்லை கதிர் ஜோடிக்கு தான் மவுசு அதிகம். இவர்கள் இருவருக்கும் இடையில் வரும் காதல் காட்சிகள் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் காவியா முல்லையாக நடித்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பத்தில் ரசிகர்கள் இவர்களை வெறுத்தாலும், நாளடைவில் காவியாவை பிடித்தும் போனது. தற்போது கதிர் முல்லைக்கு காதல் காட்சிகள் அதிகரித்து தான் வருகிறது. அப்படி இருக்க புது முல்லையாக நடிக்கும் காவியா கண்ணனுடன் இணைத்து பல ரீல்ஸ் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கார்த்தி நடித்த சிறுத்தை படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர்.
ஐஸ்வர்யாவிற்கு சேதுவுடன் தான் திருமணமா?? திக்திக் நிமிடங்களுடன் ‘இதயத்தை திருடாதே’!!
அதாவது ‘என்ன மாயமோ மந்திரமோ தெரியல சின்ன வயசுல இருந்தே நாங்க நல்லவங்களாவே வளர்ந்துட்டோம்’ என்று சொல்ல கண்ணன், காவியா ரியாக்சன் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும் இது ரசிக்கும் படியாகவும் இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் பல லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.
அந்த விடியோவை காண இங்கே கிளிக் பண்ணுங்க.