நடிகர் அஜித்துக்கும், சிம்ரனுக்கும் நீண்ட ஆண்டுகளாகவே ஏதோ பிரச்சனை என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தன. தற்போது தான் அஜித்துக்கும், சிம்ரனுக்கும் என்ன பிரச்சனை என்பதற்கான சரியான தகவல் கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நடிகர் அஜித்:
அவள் வருவாளா, உன்னை கொடு என்னைத் தருவேன், வாலி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜித் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாக்கப்பட்ட வாலி திரைப்படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.
ஆரம்பத்தில் சிம்ரனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபடியே இருந்தன. இதனால் எந்த திரைப்படத்தில் நடிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி சிம்ரன் நின்றுள்ளார். மேலும் தனக்கு மணிரத்னம் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தததாகவும், இந்த வாலி படத்தால் அந்த வாய்ப்பை தான் இழந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.
சிம்ரன் மேல் பரிதாபப்பட்டு நடிகர் அஜித், வாலி பட குழுவினரிடம் பேசி 2 வாரங்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார். பின்னர் தான் சிம்ரனுக்கு மணிரத்னத்திடம் இருந்து எந்த பட வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. வேறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் இந்த திரைப்படத்தில் நடிக்காமல் விலகவே சிம்ரன் அவ்வாறு பொய் கூறியுள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்