தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரீச் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ், அனிருத் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தான் இசையமப்பாளராக அனிருத் அறிமுகமானார். மேலும் இந்த வாய்ப்பை அவருக்கு அளித்ததே தனுஷ் தான். அந்த நேரத்தில் அனிருத் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் தனுஷ் அவரின் ஆசையை புரிந்து கொண்டு சொந்த செலவில் கீபோர்டு வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் 3 படத்தில் இசையமைக்கவும் சொன்னார். அந்த படத்தின் மூலம் தான் தற்போது அனிருத் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். நிச்சயம் அனிருத்தின் இந்த நிலைமைக்கு தனுஷ் தான் காரணம் என வெளிப்படையாக பேசியுள்ளார்.