இன்றைய காலகட்டத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு “பிரதமரின் சூரிய வீடு மின்சாரம்” திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வீட்டின் கூரையில் மானிய விலையில் சோலார் அமைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி தனிநபர் வீடு அல்லது நிறுவனங்களின் மேற்கூரையில் 1 முதல் 2 கிலோவாட் திறன் சோலார் அமைத்தால் ரூ.30,000 மானியம் எனவும், கூடுதலாக கிலோவாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம் ரூ.78,000 வரை மானியங்களை மத்திய அரசு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் சொந்த வீடு மற்றும் ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர் எனில், https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., தீவிர விசாரணையில் விசாரணை குழு!!!