தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இப்போது 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதில் முதற்கட்டமாக ஆங்கிலம், தமிழ் போன்ற மொழி பாட தேர்வுகளும் இதனைத் தொடர்ந்து அறிவியல், கணிதம் போன்ற தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழிப்பாடம் எழுத தேவையில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு 5 ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் சிறுபான்மை மாணவர்கள் அனைவரும் தங்களது தாய்மொழி பாடத்தினை பகுதி ஒன்றின் கீழ் தேர்வு எழுத அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
Swiggy போன்ற இணையதளம் சார்ந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட்., நல வாரியத்திற்கான அரசாணை வெளியீடு!!!