தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரயில் போக்குவரத்து அதீத தேவையாக மாறி வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களில் பயணிகள் உட்கார இடமில்லாமல் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு கோரிக்கைகள் பறந்த வண்ணம் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நாளை (மார்ச் 26) திருநெல்வேலி to தாம்பரம் (06040) செல்லும் சிறப்பு ரயிலில் கூடுதலாக பெட்டிகளை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ரயில் ஞாயிறு தோறும் மாலை 06.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செல்லும் இந்த சிறப்பு ரயில் விருதுநகர், மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இதில் A/c, ஸ்லீப்பர் கோச்சுடன் நான்கு முன்பதிவில்லாத பெட்டிகள் (Unreserved), 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என நாளை (மார்ச் 26) இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.