நடிகை அங்காடி தெரு சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நிலையில் மர்ம நபர் ஒருவர் கொச்சையாக பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை சிந்து:
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான “அங்காடி தெரு” படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிந்து. மேலும் பல திரைப்படங்களிலும், சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவ உதவி கேட்டு வீடியோவை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவர் கேட்டுக்கொண்டபடி பலரும் அவருக்கு மருத்துவ செலவுக்கு உதவினர். அதன் மூலம் 2 ஆண்டுகளை கடந்து வந்த சிந்து, சமீபத்தில் என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறி அழுத சம்பவம் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்படி கஷ்டப்பட்டு வரும் சிந்துவுக்கு ஒரு நபர் உதவி செய்கிறேன் என்று சொல்லி போன் நம்பரை வாங்கி சென்றுள்ளார்.
அதற்கடுத்து சிந்துவை தொடர்பு கொண்ட அந்த நபர் வீடியோ கால் வர சொல்லி கட்டாய படுத்தி உள்ளார். அதற்க்கு ஏன் வீடியோ கால் வரணும் என்று சிந்து கேட்க, ஒரு பக்க மார்பகத்தில் தானே உனக்கு கேன்சர் கட்டி இருக்கிறது. இன்னொரு பக்க மார்பகத்தை காட்டு உனக்கு நான் ஐந்து லட்சம் தருகிறேன் என்று கொச்சையாக பேசியுள்ளார். இதனை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சொல்லி வேதனைப்பட்டார்.