விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இதில் திருமண மேடை வரை போன திருமணம் சிலரின் சூழ்ச்சியால் நின்று விட்டது. இந்த நிலையில் சூர்யாவின் தோழியாக என்ட்ரி கொடுத்திருக்கும் ஷிவானியால் வெண்ணிலா மற்றும் சூர்யா இருவருக்கும் இடையில் இன்னும் பிளவு அதிகமாகி இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி விறுவிறுப்பாக டெலிகாஸ்டாகி வரும் இந்த தொடரில் சூர்யாவின் பெரியம்மாவாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிகை வீணா வெங்கடேஷ் நடித்து வந்தார். அதன் பிறகு சில காரணங்களால் இதிலிருந்து விலகி சென்றார்.மேலும் இவருக்கு பதிலாக செய்தி வாசிப்பாளர் மற்றும் ”மேயாத மான்’ படத்தில் அம்மாவாக நடித்திருந்த நடிகை சுஜாதா பஞ்சு இதில் நடிக்க கமிட்டானார்.
TNTET- இல் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு…, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியான முக்கிய அறிவிப்பு!!
அந்த வகையில் இதுவரை மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜாதா இதில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இனி இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் வீணா வெங்கடேஷ்யே கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.