கில்லி, ஆறு, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா. இவர் 2005 முதல் வெற்றி படங்களை கொடுத்தாலும் 2015 க்கு பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது பொன்னியின்செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து அடுத்து தளபதி 67 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இவர் நடிப்பில் முன்னதே உருவான ராங்கி படம் இன்று திரைக்கு வந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு திரிஷா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது பத்திரிகையாளர்களில் ஒருவர் நயன்தாரா பெண்களின் படமாக நடித்து வருகிறார்.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” இப்படி போக காரணம் இவங்க தான்.., பகிரங்கமாக பழி சுமத்திய வடிவேலு!!
அவுங்களுக்கு போட்டியா நீங்கள் நடிக்கிறீங்களா என கேட்டுள்ளனர். அதற்கு திரிஷா பெண்களை பற்றி படம் வருவது சமூகத்திற்கு நல்லது என்றும் இன்று ஒரே நாளில் நான்கு பெண்களை பற்றிய திரைப்படம் வெளியாகிறது என்றும், இது யாருக்கும் போட்டியில்லை என்றும் பதிலளித்துள்ளார்.