சேலையில் ஒரு தினுசாக போஸ் கொடுத்த ஷிவானி – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் பெயரினை பெற்ற நடிகை ஷிவானி நாராயணன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஷிவானி நாராயணன்

மக்களுக்கு என்றுமே சீரியல் என்றால் தனி பிரியம் தான். அந்த வகையில் தனது மிக சிறிய வயதிலேயே சீரியலில் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான், நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலில் தான் நாயகியாக அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலில் ஆரம்பத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், பின், முக்கிய நாயகியாக மாறினார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கு அப்போது 18 வயது தான். ஆனாலும், தனது தேர்ந்த நடிப்பின் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் பெயரினை பெற்றார்.

குறிப்பாக, இந்த சீரியலில் இவருக்கும் நடிகர் ஆசாத்திற்கும் இருந்த கெமிஸ்ட்ரிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். ஷிவானி அதன் பிறகு ஒரு சில நாடகங்களில் நடித்தார். இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக இவர் மிகவும் பிரபலமானார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை இருந்த ஷூட்டிங் விடியோவை வெளியிட்ட கதிர் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

இவர் “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே இவர் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

பின், இவரது அம்மா வந்து நன்றாக இவரை திட்டி விட்டு சென்றதும், இவர் தனது போட்டியில் கவனம் செலுத்தினார். தற்போது ஷிவானி தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here