நேற்று நடத்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி தனது விக்கெட்டை இழந்த கோவத்தில் செய்த செயல் தற்போது கண்டிக்கப்பட்டு வருகிறது.
விராட் கோஹ்லி:
இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 149 ரன்களை குவித்தது. எளிதான இலக்கை துரத்திய ஐதராபாத் அணி துவக்கத்தில் இருந்தே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. எனவே இந்த போட்டியில் ஐதராபாத் அணி மிக எளிதாக தனது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஆட்டம் பெங்களூர் கைவசம் வந்தது. கடைசி கட்டத்தில் பெங்களூர் அணியினர் மிக சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி செய்த செயல் அனைவராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. கோஹ்லி தனது பேட்டிங்கின் போது 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நீங்க வேற லெவல் ஹிட்மேன் அசத்திடீங்க போங்க – ரோஹித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி பெவிலியன் திரும்பும் பொழுது பவுண்டரி லைனில் உள்ள விளம்பர பலகைக்கு அருகே உள்ள நாற்காலியை தனது பேட்டினால் அடித்தார். இது சர்ச்சையை கிளப்பியது. தற்போது இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் கூறியதாவது, விராட் கோஹ்லி செய்தது நடத்தை மீறிய செயலாகும். ஐபிஎல் விதியின் படி இது முதல் அளவிலான குற்றம். எனவே இதற்கு நடுவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்று தெரிவித்தது.