டெல்லியில் தற்போது கொரோனாவின் நான்காவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது இதனை குறைப்பதற்காக டெல்லி முதலமைச்சர் பல நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டம் தீட்டி வருகிறார்.
முழு ஊரடங்கு:
நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த வருட கொரோனாவின் முதல் அலையில் இல்லாத பாதிப்பு தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் மிக அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் பகுதியில் டெல்லியும் ஒன்று. அங்கு தற்போது கொரோனாவின் நான்காவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!
இருந்தும் நாளுக்கு நாள் அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதுகுறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் வாரத்தின் இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் செயல்படும் காய்கறி மார்க்கெட் இனி வார நாட்களில் செயல்படும் என்றும் வார இறுதி நாட்களில் ஹோட்டல், மால் உள்ளிட்டவை இயங்காது என்றும் ஹோட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்தார்.