நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் இருந்து, சோகமே உருவான வடிவில் நடந்து போகும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை கதி கலங்க செய்துள்ளது.
ரசிகர்கள் கலக்கம் :
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வந்த சமந்தா, சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் சமீபத்தில் தெலுங்கில் நடித்த யசோதா படம், வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சமந்தா மயோசிடஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் இவர் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சமந்தா மும்பை விமான நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. முகத்தில் சிரிப்பு இல்லாமல், ஏதோ விதி போச்சு, என சோகத்துடன் அவர் நடந்து செல்வதை பார்த்து பலரும் திகைத்துப் போயினர்.
சும்மா ஐஸ் ஆப்பிள் போல் அழகில் ஜொலிக்கும் யாஷிகா.., மனதை பறிகொடுத்து தவிக்கும் இளசுகள்!!!!
சினிமாவில் நாங்க பார்த்த சமந்தா இது கிடையாது, அவருக்கு என்னதான் ஆச்சு? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருந்தாலும் சமந்தா இதையெல்லாம் தாண்டி, தற்போது நடித்து வரும் சாகுந்தலம் மற்றும் குஷி போன்ற படங்களில் எதிர்பாராத ஹிட் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram