தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் வருகிற ஜனவரி 11ஆம் தேதி, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிர்வாகம் அறிவிப்பு :
தமிழகத்தில், கோவில் திருவிழா போன்ற முக்கிய பண்டிகைகளின் போது, அரசின் சார்பாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா, இந்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி கோவில் நிர்வாகத்தால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த விழாவிற்கு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், வருகிற ஜனவரி 11 ஆம் தேதியான புதன்கிழமை மட்டும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு கட்ட, ஜனவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விடுமுறை நாளில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது என்றும், ஆனால் மாவட்ட கருவூலகம் மற்றும் கிளை கருவூலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.